நெற்குப்பை பேரூராட்சியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
28/01/2023 12:49:11pm.
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் 74 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக செயல் அலுவலர் வே.கணேசன் முன்னிலையில் பேரூராட்சி மன்ற தலைவர் அ.புசலான் தேசியக்கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து நகரில் தூய்மை குறித்து பேசியதோடு மட்டுமல்லாமல் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லா பேரூராட்சியாக மாற நாம் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் இவ்விழாவில் முன்னாள் ராணுவ வீரர் சூரியகுமார்க்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. நடைபெற்ற நிகழ்ச்சியில் இளநிலை உதவியாளர் சேரலாதன், வரித்தண்டர் துரைராஜ், வார்டு உறுப்பினர்களான கண்ணன், தனபாக்கியம், சேக்கப்பன், அழகு, அமுதா, நிஹார்பானு, சித்ரா, தூய்மை பணி மேற்பார்வையாளர் சிற்றரசு, மற்றும் அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், மாணவ மாணவிகள் என பலரும் பங்கேற்றனர். இந்நிகழ்வில் மாவட்டத்திலேயே "குப்பை இல்லா தூய்மை பேரூராட்சி" ஆக மாற அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
.






