?>
மாவட்ட அளவிலான இயற்கை விவசாய சான்றிதழ் வாங்குவது குறித்த விவசாயிகள் பயிற்சி.

20/05/2022 06:37:57pm.

      வேளாண்மை உழவர் நலத்துறை விரிவாக்க சீரமைப்பு திட்டம் (அட்மா) உள் மாவட்ட அளவிலான இயற்கை விவசாய சான்றிதழ் வாங்குவது குறித்த விவசாயிகள் பயிற்சி சிவகங்கை மாவட்டம்  காளையார்கோவில் வட்டாரத்தில் விரிவாக்க சீரமைப்பு திட்டம் கீழ் விதைச் சான்று மற்றும் அங்கக சான்றளிப்பு துறை சார்பாக இயற்கை விவசாயி சான்றிதழ் தொடர்பான உள் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி காளையார்கோயில் வட்டாரத்தை சேர்ந்த 40 விவசாயிகளுக்கு 19.06.2022 அன்று மதுரை சாமி விதைச்சான்று உதவி இயக்குனர்  தலைமையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்    கருமந்தகுடி கிராமத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியில் விதைச்சான்று உதவி இயக்குனர்  விவசாயிகளுக்கு விவசாயத்திற்கு அடிப்படைத் தேவை அல்லது மூலத்தேவை தரமான விதைகளே அதிக விளைச்சலுக்கு தரமான விதைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
    தரமான விதைகளை பயன்படுத்துவதால் மகசூலை 15% அதிகப்படுத்தலாம். எனவே ஒவ்வொரு விவசாயியும் விதைகளின் உற்பத்தி நிலைகள் பற்றியும் தரமான விதைகள் முக்கியத்துவம் பற்றியும் தெரிந்து வைப்பது அவசியம் என்று விரிவாக எடுத்துக் கூறினார். அங்கக சான்றளிப்பு காண  வழிமுறைகள் : சான்றளிப்பு க்கான பொதுவான வழிமுறைகள் விண்ணப்படிவம் மதிப்பீடு செய்தல் ஆய்வுக்கான நேரத்தை அட்டவணை இடுதல் ஆய்வின்போது ஆவணங்களை சரிபார்த்தல் மற்றும் அங்கக சான்றளிப்புக்காண தமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறை வழிமுறைகள் குறித்து விரிவான முறையில் எடுத்துரைத்தார். மேலும் அங்கக வேளாண்மையின் முறைகளான பண்டைய மேலாண்மை முறைகளிலிருந்து அங்கக மேலாண்மை முறையாக மாற்றுதல் மாற்று மூல  காரணங்களாக பயிர் சுழற்சி பயிர் கழிவு மேலாண்மை அங்கக எருவு உயிரியல் உள்ளீடுகள் ஆகியவற்றைக் கொண்டு பயிர் உற்பத்தியை மேம்படுத்த வேண்டும் கால்நடைகளை அங்கக முறைப்படி பராமரித்து அவற்றையும் வேளாண்மையின் ஓர் அங்கமாக ஆக்குதல் விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துக் கூறினார். இப்பயிற்சியில் உதவி வேளாண்மை அலுவலர் செல்வம் விவசாயிகளுக்கு விவசாய கடன் அட்டை குறித்து விவசாயிகளுக்கு அதை வாங்குவது எப்படி அதன் பயன்கள் என்ன மேலும் என்னென்ன ஆவணங்கள் தேவை போன்ற விவரங்களை விரிவான முறையில் எடுத்துக் கூறினார்.
    மேலும் தென்னை நுண்ணூட்ட சத்து கலவை தமிழ்நாடு வேளாண்மைத் துறையினரால் தயாரிக்கப்படுகிறது. கலவை மற்றும் உயிர் உரங்களை தேவையான அளவு தொழுஉரம் கலந்து இடலாம் எக்காரணத்தைக் கொண்டும் இரசாயன உரங்களுடன் கலக்க கூடாது என்று தென்னையில் அதிக மகசூல் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு விரிவான முறையில் எடுத்துக் கூறினார்.
      இப்பயிற்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் கோகிலா விவசாயிகளுக்கு முளைப்புத் திறனை மேம்படுத்துவதற்கான விதை நேர்த்தி மற்றும் பயறுவகை பயிர்கள் விதை நேர்த்தி தொழில்நுட்பங்களை எடுத்துக் கூறினார். மேலும் உதவி விதை அலுவலர் திரு புவனேந்திரன் விவசாயிகளுக்கு அங்கக வேளாண்மையில் இயற்கை உரத்தின் முக்கியமான ஆதாரங்கள் குறித்து எடுத்துக் கூறினார். பயிற்சியில் உதவி தொழில்நுட்ப மேலாளர்  காளீஸ்வரி விவசாயிகளுக்கு நன்றியுரை கூறினார். பயிற்சியில் உழவன் நண்பன் காளைலிங்கம் பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்தார்.
.