?>
காட்டுப்பட்டி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது..

23/08/2021 04:58:46pm.

இரா.பாஸ்கர் செய்தியாளர் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள காட்டுப்பட்டியில் பொதுமக்களுக்கு கோவிட் தடுப்பூசி போடும் மருத்துவ முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு உத்தரவின்படி மாவட்ட சுகாதார பணிகளின் துணை இயக்குநர் டாக்டர் அர்ஜூன்குமார் அறிவுறுத்தலின்படி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருள்மணி நாகராஜன் ஆலோசனையின்படி காட்டுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அழகு ராமச்சந்திரன் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் முன்னிலையில் அப்பகுதி பொது மக்களுக்கு டாக்டர் அருண்குமார் காய்ச்சல், சளி, இருமல், உடல் வெப்பநிலை உள்ளிட்ட பரிசோதனை மேற்கொண்டார். உடல் பரிசோதனை மேற்கொண்ட பொது மக்களுக்கு கிராம செவிலியர் மாரியாயி தடுப்பூசியை செலுத்தினர். இதில் ஊராட்சி செயலர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்..