?>
திருப்பத்தூர் பகுதியில் எம்.புதூர் அருகே தடையை மீறி மஞ்சுவிரட்டு 1000 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு - 20 க்கும் மேற்பட்டோர் காயம்

13/08/2021 04:23:31pm.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் எம்.புதூர் அருகே மின்னல்குடிபட்டியில் நடந்த மஞ்சுவிரட்டில் 1000 -க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன காளைகள் முட்டியதில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் திருப்பத்தூர் பகுதியில் எம்.புதூர் அருகே மின்னல்குடிபட்டியில் உள்ள காளியம்மன் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளியன்று ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடைபெறுவது வழக்கம். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்தாண்டும், இந்தாண்டும் திருவிழா நடைபெறவில்லை. மேலும் கோயில் திருவிழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மஞ்சுவிரட்டு நடத்துவது வழக்கம் தற்போது கொரோனா கட்டுபாடுகளால் மஞ்சுவிரட்டு நடத்த கூடாது என காவல்துறையினர் ஊர் பெரியவர்களிடம் கூறி கட்டுபாடுகள் விதித்திருந்த நிலையில் மஞ்சுவிரட்டு குழு இளைஞர்கள் இணைய வழி மூலம் இன்று மஞ்சுவிரட்டு நடைபெறும் என அறிவித்திருந்தனர் இதையறிந்து வாகனங்களில் அழைத்து வரப்பட்ட 1000 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன மேலும் காளைகள் முட்டியதில் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் மஞ்சுவிரட்டை காண பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வருகை தந்தனர். காவல்துறை தடுத்தாலும் மாற்று வழிகளில் சென்று மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் கொரோனா ஊரடங்கு தடையை மீறி மஞ்சுவிரட்டு நடந்ததை அடுத்து திருக்கோஷ்டியூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்..